Tuesday, November 23, 2010

Home » » பாண்டா கரடிக்கு ஆன்லைனில் பெயர் சூட்டு விழா

பாண்டா கரடிக்கு ஆன்லைனில் பெயர் சூட்டு விழா


ஆஸ்திரேலிய பாண்டா கரடிக்கு ஆன்லைனில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் சிட்னியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பாண்டா கரடி குடும்பம் வசித்து வந்தது. இந்த பாண்டா கரடி குடும்பத்திற்கு புதிய வரவாக குட்டி ஒன்று வந்தது. இதற்கு பெயர் வைப்பதற்கு ஆன்லைனில் போட்டியை நடத்தினர் வனவிலங்கு பூங்கா நிறுவனத்தினர். பூங்கா சார்பில் பூஹூ (ஹேப்பி டைகர்), வெய் ஷியங்( ஜாய் ஆப் வியன்னா), ஆவோ காங்( ஹெல்தி ஆஸ்திரேலியன் பாய்) என்ற மூன்று பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த ஆன்லைன் போட்டியில் சுமார் 5 ஆயிரம் உயிரியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அதில் பூஹூ பெயரை 50.1 சதவீதம் பேரும் 40.8 சதவீதம் பேர் வெய்ஷியாங் பெயரையும், வெறும் 9.1 சதவீதம் பேர் மட்டும் ஆவோ காங் பெயரை தேர்வு செய்திருந்தனர். பூஹூ பெயரை தேர்வு செய்தவர்கள் அனைவரும்2010-ம் ஆண்டு சீனாவுக்கு புலி ஆண்டாக இருப்பதால் அதனையே தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பாண்டா குட்டியின் பெற்றோர்கள் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களாவர். 

Share this article :