Tuesday, November 23, 2010

Home » » கரை ஒதுங்கியது ராட்சத திமிங்கலம்

கரை ஒதுங்கியது ராட்சத திமிங்கலம்

சென்னைத்துறைமுகம் அருகே, ராட்சத திமிங்கலம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. சென்னைத் துறைமுக சிக்னல் பகுதியில், நேற்று ராட்சத திமிங்கலம் ஒன்று மிதந்தது. அழுகிய நிலையில் மிதந்த திமிங்கலத்தை, துறைமுக ஊழியர்கள் சிறு படகுகள் மூலம் கட்டி, கரையோரம் இழுத்து வந்தனர். இரண்டு டன் எடைக்குமேல் இருந்ததால் அவற்றைத் தூக்க முடியவில்லை. இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அமைச்சர் சாமி, துறைமுக தலைவர் அதுல்யமிஸ்ராவும் திமிங்கலத்தை பார்வையிட்டனர். அவற்றை முறையாக அப்புறப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. அழுகிய நிலையில் இருப்பதால், அவற்றை இன்று அப்புறப்படுத்தி, கடலோரப் பகுதியில் புதைக்கப்படும் என தெரிகிறது.

Share this article :