Wednesday, November 24, 2010

Home » » நாய்க்குட்டிக்குப் பெயர் வைக்க நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ளார் ரஷ்யப் பிரதமர்!

நாய்க்குட்டிக்குப் பெயர் வைக்க நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ளார் ரஷ்யப் பிரதமர்!

கடந்த வார இறுதியில் பல்கேரியப் பிரதம மந்திரியால் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடினுக்கு ஒரு நாய்க்குட்டி பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. ஆண் நாய்க் குட்டியான இதற்கு பொருத்தமான ஒருபெயரைச் சூட்ட உதவுமாறு அவர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது சம்பந்தமாக அறிவித்துள்து. பல்கேரியாவும் ரஷ்யாவும் கடந்த வார இறுதியில் குழாய் மூலமான எண்ணெய் விநியோகம் தொடர்பான பல உடன்படிக்கைகளைச் செய்து கொண்டன.
இதன் நினைவாக பல்கேரியப் பிரதமர் பொய்கோ பொரிஸோ நிகழ்வுகளின் முடிவில் கரகாச்சான் ரக நாய்க்குட்டி யொன்றை ரஷ்யப் பிரதமருக்குப் பரிசாக அளித்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த நாய்க்கு ஒரு அழகிய பெயரைச் சூட்டவே அவர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்
Share this article :